தமிழகத்தில் அரசு பேருந்தை குறைவான கட்டணத்தில் இயக்குவதற்கு நடவடிக்கை! அமைச்சர் சிவ சங்கர் விளக்கம்!!

அரசு போக்குவரத்துகழக முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக செயற்குழு கூட்டம் சென்னை எழும்பூரிலுள்ள தனியார் விடுதியில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் சிவ சங்கர் பங்கேற்றார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவ சங்கர் “கூட்டத்தில் தொழிலாளர்களின் நலனுக்கான முக்கியமான கோரிக்கைகளை வலியுறுத்தினர். மகளிருக்கான இலவச பேருந்தில் பணிபுரியும் ஊழியர்கள், மழைகாலம் மற்றும் கொரோனா காலத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு நிலுவை தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி ஊதிய உயர்வு ஒப்பந்தமானது அமைந்துள்ளது. இதற்கிடையில் ஒன்றிய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைத்து வருகிறது. தமிழ்நாட்டில் பல நெருக்கடி சூழ்நிலை இருந்தாலும், போக்குவரத்து துறையிலுள்ள சிக்கல்களை, கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ளபடுகிறது. கொரோனாவுக்கு பின் பேருந்துகளில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னையில் 69 சதவீதம் பெண்கள் போக்குவரத்து உள்ளது. இந்த மகளிருக்கு இலவசபேருந்து என்பது லாபம் தரும் செயல்பாடாக இருக்கிறது.

இதனிடையில் தானியங்கி டிக்கெட் முறை சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மண்டலங்களில் இப்போது கொண்டுவந்துள்ளோம். இதேபோன்று விரைவில் மற்ற மண்டலங்களிலும் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மகளிர் பேருந்துகளில் முன் புறமும், பின் புறமும் மட்டும் வண்ணம் அடிப்பது தொடர்பாக முன்பே தெரிவித்தது போல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

அத்துடன் அரசுபேருந்துகளில் ஓட்டுநர், நடத்துனர் காலிப்பணியிடங்கள் நிரப்ப விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். அதன்பின் ஆம்னி பேருந்துகள் கட்டண நிர்ணயம் செய்ய அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. பண்டிகை காலங்களில் மீண்டுமாக அவர்களுடன் இதுகுறித்து பேச இருக்கிறோம். அரசுபேருந்தை குறைவான கட்டணத்தில் இயக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொது மக்கள் அரசு பேருந்தை பயன்படுத்தினால் குறைவான கட்டணத்தில் பயணிக்கலாம்” என்று அவர் பேசினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஹரி சங்கர், கோவை வடக்கு.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp