திக்..திக்.. சாலை! திகிலூட்டும் பாதை! தெருவிளக்கு எரியாததால் பொதுமக்களுக்கு வந்த சோதனை!!!

கோவை மாவட்டம் கணபதியில் இருந்து மணியக்காரன் பாளையம் மற்றும் உடையாம்பாளையம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீதேவி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது.இங்கு நான்கு ரோடுகள் சந்திக்கும் பகுதியில் நீண்ட நாட்களாக தெருவிளக்கு எரியாமல் உள்ளது. இதனால் இந்த பகுதியில் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த பகுதியில் வசிக்கும் பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகள் இந்த பகுதியை கடக்கும்போது மிகவும் பயத்துடன் கடந்து செல்கிறார்கள்.

நான்கு முறை சந்திப்பில் இரு சூழ்ந்துள்ளதால் அடிக்கடி வாகன விபத்தும் ஏற்பட வாய்ப்புள்ளது. இருள் சூழ்ந்துள்ள பகுதியாய் இருப்பதால் திருட்டு பயமும் அதிகரித்துள்ளது.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

எனவே இந்தப் பகுதியில் உள்ள பழுதடைந்த தெரு விளக்குகளை மாற்றி விட்டு புதிய தெருவிளக்குகளை அமைத்து தரும்படி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுகிறார்கள்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஏ.பழனி, கணபதி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp