திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று இரவு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது. ரயில் நிலையம் அருகில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் திடீரென்று ரயில் முன்பு பாய்ந்தார். ரயில் மோதியதில் அவரது தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதுகுறித்து தகவல் அறிந்த நெல்லை ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார் என்ற விபரம் தெரியவில்லை. கட்டம் போட்ட சட்டையும், கைலியும் அணிந்திருந்தார். இந்த சம்பவம் குறித்து நெல்லை ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முத்தரசு கோபி, ஶ்ரீவைகுண்டம்.