தூத்துக்குடியில் தாய்பால் வாரவிழாவையொட்டி நடத்தப்பட்ட கோலப்போட்டியை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்!!

தூத்துக்குடியில் தாய்பால் வார விழாவையொட்டி கோளரங்கம் முன்பு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடைபெற்ற கோலப்போட்டியை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார். ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட குழும இயக்குநர் அமுதவல்லி, ஆட்சியர் செந்தில்ராஜ், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன மின்னணு வாகனத்தில் தாய்பால் வாரவிழா குரும்படம் திரையிடப்பட்டது.

விழாவில் சுகாதரார பணிகள் இணை இயக்குநர் பொன்செல்வன், மருத்துவ கல்லூரி இணை இயக்குநர் பொன் இசக்கி, மருத்துவ கல்லூரி பொறுப்பு டீன் ராஜேந்திரன், மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் வீரபுத்திரன், தாசில்தார் செல்வகுமார், கோட்டாச்சியர் சிவசுப்பிரமணியன், மாநகராட்சி நகர் நல அலுவலர் டாக்டர் அருண்குமார், மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் ரதிதேவி, சுகாதார அதிகாரி ஸ்டாலின் பாக்கியநாதன், மாநகராட்சி ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மற்றும் மணி, செந்தில்குமார், அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தாய்பால் முக்கியத்துவம் குறித்து 27 கோலங்களிலும் விழிப்புணர்வு வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் தெற்கு வடக்கு கிழக்கு மேற்கு என நான்கு மண்டலங்கள் சார்பிலும், தூத்துக்குடி மாவட்ட 12 ஊராட்சி ஓன்றிய அலுவலகங்கள் சார்பிலும், மருத்துவ கல்லூரி பயிற்சி மாணவிகள் சார்பில் இரண்டு கோலங்கள் உள்பட 27 கோலங்கள் போடப்பட்டிருந்தன. அதில் ஒரு கோலத்தில் தடுப்பூசியை காட்டிலும் நோய் தீர்க்கும் மருந்து தாய்பால் என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.

-முத்தரசு கோபி, தூத்துக்குடி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp