தூத்துக்குடியில் பனிமய மாதா கோவில் திருவிழா மிக சிறப்பாகவும் கோலாகலமாக நடைபெற்றது!!

பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி தூத்துக்குடியில் மிக சிறப்பாகவும் கோலாகலமாகவும் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழா நேற்று 5 நாள் திருவிழா கோலகலமாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். தூத்துக்குடியில் அமைந்து உள்ள பிரசித்திபெற்ற தூய பனிமயமாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்டு 5-ம் தேதி வரை நடைபெறும். அதன்படி 440-வது ஆண்டு பெருவிழா தொடர்ந்து வெகு விமரிசையாகக் தொடங்கியது

இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து காலை 6.45 மணிக்கு ஆலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் அன்னையின் திருக்கொடியை பிஷப் ஸ்டீபன் அந்தோணி ஏற்றி வைத்தார்.

நேற்று 5 நாள் திருவிழாவில் கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கானோர் அங்கு நிறுவப்பட்டிருக்கும் கடைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் மற்றும் பொருட்காட்சி திடல் ஆகியவற்றை மிக சிறப்பாகவும் கோலாகலமாக குடும்பத்துடன் கண்டு ரசித்து மகிழ்ந்தனர்.

இந்த திருவிழா ஜுலை 26 முதல் ஆகஸ்ட் 5 வரை நடைபெற உள்ளது. திருவிழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இந்த திருவிழாவையொட்டி 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 5-ந் தேதி 10-ம் திருவிழா அன்று இரவு 7 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனை நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக 5-ந் தேதி காலை 7.30 மணிக்கு பெருவிழா கூட்டு திருப்பலியும், 9 மணிக்கு மறைமாவட்ட முதன்மை குரு பன்னீர் செல்வம் தலைமையிலும், 10 மணிக்கு பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையிலும் சிறப்பு திருப்பலிகள் நடக்கிறது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-வேல்முருகன், தூத்துக்குடி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp