தூத்துக்குடியில் வாலிபரை வெட்டிக் கொன்ற 2 இளஞ்சிறார்கள் உட்பட 4பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி பிரைன்யன்ட் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் சரவணக்குமார் (28). பெயிண்டராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று இரவு 9:45 மணியளவில் தனது உறவினர் ஒருவரை புதிய பஸ் நிலையத்தில் சென்னைக்கு செல்லும் பஸ்ஸில் அனுப்பிவிட்டு, வீட்டு வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
4ஆம் ரயில்வே கேட் அருகே வந்தபோது மர்ம கும்பல் அவரை சராமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து வடபாகம் போலீசார் விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட சரவணன் குமார் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிந்து தூத்துக்குடி தாளமுத்து நகர், காமராஜ் நகரைச் சேர்ந்த கந்தையா மகன் மனோ ரோஸ்வாஸ் (25) மருத்துவ நகரை சேர்ந்த பொன்ராஜ் மகன் துரைசாமி (25), மற்றும் 2 இளஞ்சிறார்கள் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தாளமுத்து நகரை சேர்ந்த கார்த்திக் என்பவரை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-வேல்முருகன், தூத்துக்குடியில்.