வேலூர் வள்ளலார் அடுத்த பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த ரகுநாதன் (35). இவர் நேற்று மாலை வள்ளலார் டபுள் ரோடு பகுதியில் சாலை நடுவே உள்ள நாவல் மரத்தில் நாவல் பழங்களை பறித்த போது கீழே தவறி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த சத்துவாச்சாரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிந்து உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-P. இரமேஷ், வேலூர்.