பாஜக மாநில பொதுச்செயலாளர் வீட்டில் திடீர் தீ விபத்து!!

வேலூர் டோல்கேட் கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் பாஜக மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி. இவர் ஆம்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றார். வீட்டில் அவருடைய தாய் மற்றும் மகள், மகன் இருந்தனர் வீட்டு மாடியில் உள்ள அறையில் மகள், மகன் பழைய பொருட்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்தார்.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அப்போது எதிர்பாராதவிதமாக படுக்கையில் தீப்பற்றியது. இதனால் அதிர்ச்சியடைந்த இவரும் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ மளமளவென்று பற்றி எரிந்து அலமாரியில் இருந்த புத்தகங்களில் தீப்பற்றியது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் அலறியடித்தபடி மாடியில் இருந்து கீழே இறங்கினார்.

இதுகுறித்து வேலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பெயரில் நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையிலான வீரர்கள் அங்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் முப்பது நிமிடப் போராட்டத்திற்குப் பின் முற்றிலும் தீ அணைக்கப்பட்டது. இதில் படுக்கை, புத்தகங்கள் மற்றும் சுவற்றில் மாட்டியிருந்த போட்டோக்கள் எரிந்து நாசமாகயதாக தீயணைப்புத்துறையினர் தகவல் தெரிவித்தனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-P. இரமேஷ், வேலூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp