தூத்துக்குடி மாவட்டம்: ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள பாஞ்சாலங்குறிச்சியை நவீன பஞ்சாயத்தாக தரம் உயர்த்துவது குறித்து நேற்று கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதில் உள்ள பாஞ்சாலங்குறிச்சி இந்திரா நகர் காலனியில் கடந்த அதிமுக ஆட்சியில் சமுதாய நலக்கூடம் அமைப்பதற்கு 2019 முன்னாள் அமைச்சர் S P வேலு மணி தலைமையில் ஓட்டப்பிடாரம் முன்னாள். MLA மோகன் முயற்சியில் ருபாய் 61 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இடத்தை தேர்வு செய்வதில் குழப்பம் .
கடந்த சுதந்திர தின கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் வைத்த கோரிக்கைகள் மீது கலெக்டர் ஆய்வு செய்தார். பின்னர், சிலோன் காலனி வழியே செல்லும், உயர் மின்னழுத்த மின் கம்பி செல்லும் இடத்தை ஆய்வு செய்தார்.
பாஞ்சாலங்குறிச்சியில் புதிதாக கட்டப்பட உள்ள ரேஷன் கடை, சமுதாய நலக்கூட இடங்களையும் அவர் ஆய்வு செய்தார். மேலும் பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் கோட்டையில், கட்டபொம்மனின் வரலாற்றை பறைசாற்றும் வகையில் ஒலி, ஒளி காட்சி அமைப்பது குறித்தும் ஆய்வு செய்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.