பாரம்பரிய கார் அணிவகுப்பு ஊர்வலம்!!

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்கவும், சாலை விதிகளை கடைபிடிக்க வலியுறுத்தியும் வேலூரில் பாரம்பரிய கார் அணிவகுப்பு நடைபெற்றது. 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிலையில் சாலைவிதிகளை கடைபிடிக்கும் வகையில் வேலூர் மாநகரில் தனியார் அமைப்பு மூலம் பாரம்பரிய கார் (வின்டேஜ்)அணிவகுப்பு நடைபெற்றது.

இதில் தேசியக்கொடியுடன் 20க்கும் மேற்பட்ட பாரம்பரிய கார்களில் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டிய விழிப்புணர்வு பதாகைகளுடன் அணிவகுத்துச் சென்றனர். பாரம்பரிய கார்களின் அணிவகுப்பு ஊர்வலம் தொரப்பாடி ஆட்சியர் பங்களா, முஸ்லிம் ஸ்கூல் ரவுண்டானா,ராஜா பஸ் ஸ்டாப், பழைய பேருந்து நிலையம் வழியாக சென்று கிரீன் சர்க்கிள் பகுதியில் முடிவடைந்தது.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஊர்வலத்தில் பழைய மாடல் பென்ஸ், பியட்,ஜீப் உள்ளிட்ட பல்வேறு ரக வாகனங்கள் பங்கேற்றன.விழிப்புணர்வு கார் அணிவகுப்பை ஆர்வமுடன் கண்டு ரசித்த பொதுமக்கள் கார்கள் முன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-P. இரமேஷ், வேலூர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp