மூணார் பள்ளிவாசல் பகுதியில் புலியின் நடமாட்டம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று இரவு வீட்டின் அருகில் சத்தம் கேட்ட நிலையில் காலையில் கட்டப்பட்டிருந்த நாய்கள் கடிபட்டு இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அருகில் புலியின் கால் தடம் பதிந்திருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகள் புலிகளின் நடமாட்டம் அதிகரித்துக் கொண்டு வருகின்றன என மூணார் ஹேரஞ்ச் பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கேரளா வனத்துறை அதிகிரிகள் உடனடியாக இதற்கான முயற்சியை மேற்கொண்டு மக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி உள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.