கோவை ஜோதிபுரம் முதல் வீதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி மாலதி (வயது 30). பட்டதாரியான இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். கடந்த 2020-ம் ஆண்டு ஜெய்கணேஷ் என்பவர் தன்னிடம் பிரதம மந்திரி யோஜன திட்டத்திற்காக வந்து உள்ளதாக கூறி
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தனக்கு அரசியல் பிரமுகர்கள், சென்னை தலைமைச் செயலக அரசு அதிகாரிகளின் பழக்கம் உள்ளது. அரசு வேலை வேண்டும் என்றால் வாங்கி தருகிறேன். மத்திய கோ-ஆப்ரேட்டிவ் வங்கியில் வேலை காலியாக உள்ளது. அதற்கு ரூ.5 லட்சம் செலுத்தினால் வேலை வாங்கிவிடலாம் என்று கூறியுள்ளார்.
இதனை உண்மை என நம்பிய மாலதி கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.5 லட்சத்தை கொடுத்துள்ளார். அதன்பின்னர் அவர் வேலையில் சேருவதற்காக ஆர்டரை கொரியர் மூலம் ஜெய்கணேஷ் அனுப்பி வைத்துள்ளார். அந்த ஆர்டரை பார்த்தபோது அது போலி என்பது தெரிந்து கொண்ட மாலதி ரத்தினபுரி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு அளித்தார். இதுகுறித்து ரத்தினபுரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாகுமாரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஜெய்கணேஷை வலைவீசி தேடி வருகிறார்.
-அருண்குமார், கிணத்துக்கடவு.