கோவை சாய்பாபாகாலனி அடுத்துள்ள பி.என்.புதூர் சுந்தரம் 4-வது வீதியை சேர்ந்தவர் பெரியசாமி.
இவரது மனைவி வெள்ளையம்மாள் (வயது22). சம்பவதன்று இவர் வீட்டின் அருகிலுள்ள கடைக்கு சென்றுவிட்டு திரும்பி வீட்டிற்கு நடந்து வந்து கொண்டு இருந்தபோது, இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபர்கள் 2 பேர் திடீரென வெள்ளையம்மாள் கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தங்க நகையை பறித்து சென்றனர்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதுகுறித்து வெள்ளையம்மாள் சாய்பாபகாலனி போலீசில் புகார் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் ரெஜினா வழக்குப்பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்து, விசாரணை நடத்தி வருகிறார்.
இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதால் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-அருண்குமார், கிணத்துக்கிடவு.