கோவை மாவட்டம் பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த நண்பர்கள் சந்தோஷ், குணா இருவரும் நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் ஆழியார் சென்று விட்டு பொள்ளாச்சி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அப்போது அங்கலக்குறிச்சி தனியார் கல்லூரி அருகே அதிவேகமாக முன்னால் சென்ற வாகனத்தை முந்திச் செல்லும் பொழுது நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் பலத்த காயமடைந்த சந்தோஷ் மற்றும் குணா ஆகிய இருவரையும் அப்பகுதி பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் பொள்ளாச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இது குறித்து குறித்து ஆழியார் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-M.சுரேஷ்குமார்.