பொள்ளாச்சி குமரன் நகர் அருகே 20 பவுன் நகை கொள்ளை!!

பொள்ளாச்சி நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை,15 ஆயிரம் ரொக்கம் திருட்டு துணை கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் ஆண்டாள் அபிராமி நகர் பகுதியில் வசித்து வருபவர் ரபிதீன். இவர் மார்க்கெட் ரோடு பகுதியில் பேக்கரி கடை நடத்தி வருகிறார் நேற்று இரவு குமரன் நகர் பகுதிக்கு தனது அண்ணனின் இறுதிச்சடங்கிற்காக சென்றிருந்தார்.

மறுநாள் காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பின் கதவு உடைக்கப்பட்திருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து மேற்கு காவல் நிலையத்திற்கு புகார் அளக்கப்பட்டு, விசாரணை மேற்கொண்டதில் நள்ளிரவு நேரத்தில், வீட்டின் பின்பக்க பூட்டை உடைத்து சுமார் 20 பவுன் நகை, ரூ.15 ஆயிரம் ரொக்கம் திருடிபோனது தெரியவந்துள்ளது.

மேலும் அதே பகுதியில் 2 வீடுகளின் கதவுகளை உடைக்க முற்பட்டதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் அப்பகுதியில் உள்ள CCTV கேமராக்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதனையடுத்து அப்பகுதிக்கு வந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் தீபாசுதாவின் உத்தரவின் பேரில் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp