கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட திவான்சாபுதூர் சுமிதா நகர் பகுதியில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மக்கள் வாழ்வதற்கு உண்டான அடிப்படை வசதிகள் அரசு செய்து தரவில்லை என இப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அதே சமயம் இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அளவிற்கு புதர் மண்டிய சாலைகள், குப்பை மேடுகள், சாக்கடை வசதி இல்லாததால் குளங்களாக காட்சியளிக்கும் கழிவுநீர்
மேலும் குடிநீர் குழாய்கள் பழுதடைந்து சரிவர மக்களுக்கு குடிநீர் இல்லாமை மற்றும் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இது குறித்து அதிகாரிகளின் பார்வைக்கு பலமுறை எடுத்துச் சென்றும் எந்தவித தீர்வும் எட்டப்படவில்லை என்கின்றனர்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுமிதா நகர் பொதுமக்கள் சார்பாக SDPI கட்சியினருக்கு நாங்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு வழிவகுத்து தருமாறும் மேலும் எங்களுடைய பகுதி பிரச்சனைகளை எவ்வாறு தீர்ப்பது என்ற அணுகு முறைகளையும் ஏற்படுத்தித் தருமாறு SDPI கட்சியினரிடம் கோரிக்கை மனு ஒன்றை தந்திருந்தனர்.
இந்நிலையில் அந்த மனுவினை பெற்றுக்கொண்ட SDPI கட்சியினர் உடனடியாக அவர்கள் வசிக்கும் பகுதிக்கு நேரில் சென்று கள ஆய்வுகள் செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசியதின் விளைவாக இரண்டு வருடங்களுக்கு மேலாக சரி செய்யப்படாத குடிநீர் குழாய்கள் சரி செய்யப்பட்டுள்ளது. மேலும் எரியாமல் இருந்த சாலை விளக்குகளும் எரிய தொடங்கி இருக்கிறது. SDPI கட்சியினரின் சமூக சேவை செயலைக் கண்டு இப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்து வாழ்த்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-M.சுரேஷ்குமார்.