மழை நீரும் சாக்கடை நீரும் ஒரே இடத்தில் தேங்கியுள்ளதால் நோய் பரவும் அபாயம்! நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்!!

கோவை மாவட்டம் சேரன்மாநகர் டீச்சர்ஸ் காலனி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள் சென்று வர பயன்படுத்தும் முக்கிய சாலை கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக நீர் சூழ்ந்து காணப்படுகிறது.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அந்த மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து சுகாதாரமற்ற முறையில் காணப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மேலும் நீர் சூழ்ந்துள்ளதால் அந்த இடத்தில் உள்ள குண்டும் குழிகளும் வெளியே தெரியாமல் சில ஆபத்தான நிகழ்வுகள் நடந்து உள்ளன.சுற்றியுள்ள வீடுகளுக்குள்ளும் மழை நீரும் சாக்கடை நீரும் சேர்ந்து உள்ளே புகுந்து விடுகிறது.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை உடனடியாக சரி செய்து தர வேண்டும் என்பதே அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக அலுவலகம் வேண்டுகோளாக உள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-ஏ.பழனி, கணபதி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp