கணுவாயில் இருந்து நவாவூர் பிரிவு செல்லும் சாலையில் கடந்த இரண்டு மாதங்களாக சாலைகளை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறான சூழ்நிலையில் சாலையின் ஓரத்தில் பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளன.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த பள்ளம் சாலையின் மிக அருகாமையில் அமைந்துள்ளது. சாலைகளுக்கு அருகாமையில் இவ்வாறான பள்ளங்கள் இருந்தால் தடுப்புகளை அமைத்து வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை செய்வது வழக்கம். ஆனால் இந்த சாலையில் உள்ள பள்ளங்களுக்கு அருகாமையில் எந்த ஒரு தடுப்புகளும் இல்லாமல் உள்ளது.
மேலும் மழைக்காலங்களில் மழைநீர் நிரம்பி பள்ளம் இருப்பதேே தெரியாமல் போக வாய்ப்பு உள்ளது. மேலும் இந்த சாலையில் அதிகப்படியான இருசக்கர வாகனங்களும் நான்கு சக்கர வாகனங்களும் சென்று வருகின்றன.
இவ்வாறு உள்ள சூழ்நிலையில் வாகனங்கள் செல்லும்போது விபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள். எனவே உடனடியாக இதனை சீர் செய்யுமாறு அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் சமூக ஆர்வலரும் வேண்டுகோள் விடுகிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-A.பழனி.