கிணத்துக்கடவு அருகே சங்கராபுரம் பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 65). விவசாயம் செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த இவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பெற்றும் பலனளிக்காததால் மன உளைச்சலுக்கு ஆளான பழனிச்சாமி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கினார். அவரை உறவினர்கள் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பழனிச்சாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
–அருண்குமார் கிணத்துக்கடவு.