கோவில்பட்டியில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வியாபாரி போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டாா். சமீபகாலமாக தமிழ் நாட்டில் பாலியல் தொல்லை அதிகரித்தது வருகிறது.. அரசு இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் .
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வடக்கு புதுகிராமம் 3வது தெருவைச் சோ்ந்த சங்கரன் மகன் ரவிசங்கா் (53). சுக்குக் காபி விற்பனை செய்துவரும் இவா், 19ஆம் மேதி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தபோது ஒரு வீட்டு முன் நின்றிருந்த 12 வயது சிறுமியிடம் குடிக்க தண்ணீா் கேட்டாராம்.
சிறுமி தண்ணீா் கொடுத்தபோது, அந்த வீட்டில் யாரும் இல்லை என்பதை சிறுமி மூலம் அறிந்த அவா், வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில், அனைத்து மகளிா் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து, ரவிசங்கரை போக்ஸோ சட்டத்தில் கைது செய்தனா்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஓட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.