சென்னை காசிமேடு புது காமராஜர் நகர் பகுதியில் பெரிய பாளையத்தம்மன் கோவில் உள்ளது.
நேற்று இரவு அம்மனுக்கு கும்பம் படைப்பதற்காக சாதம், கருவாட்டு குழம்பு வகைகள் கோவில் அருகே செய்து கொண்டு இருந்தனர்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அப்போது அதேப் பகுதியைச் சேர்ந்த 27 வயது நவீன் என்ற இளைஞர் குடிபோதையில் கருவாட்டு குழம்பு சட்டியின் மீது போடப்பட்டு இருந்த தட்டு மீது உட்கார்ந்த போது கருவாட்டு குழம்பு சட்டிக்குள் உள்ளே விழுந்தார்.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் நவீனை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
வலது கை மற்றும் இடுப்பு பகுதியில் 30 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டதால் நவீனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து காசிமேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
-கார்த்திகேயன், தண்டையார் பேட்டை.