வால்பாறையில் யானை துரத்தி சென்றதால் பயந்து ஓடிய முதியவர் படுகாயம்!!

கோவை மாவட்டம் வால்பாறை வில்லோனி நெடுங்குன்றம் செட்டில்மெண்ட் பகுதியில் வசித்து வரும் அருள்தாஸ்(63) என்பவர் இன்று காலை 11 மணி அளவில் வேலைக்கு சென்று கொண்டு இருக்கும் பொழுது அப்பகுதியில் உலா வந்த யானை கூட்டம் ஒன்று அவரை விடாமல் துரத்தியது.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அப்பொழுது பயத்தில் ஓடிய அருள்தாஸ் அருகிலிருந்த பள்ளத்தாக்கில் விழுந்து விட்டார்.
விடாமல் யானை துரத்தியதில் காலில் எலும்பு முறிவு மற்றும் உடலில் காயங்கள் ஏற்பட்டுள்ளது.

சத்தம் கேட்டு அக்கம் பக்கம் விரைந்து வந்து யானை துரத்தி விட்டனர். பின்பு அவரை காப்பாற்றி 108 வாகனத்தில் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. யானை துரத்தி ஒருவர் படுகாயம் அடைந்த செய்தி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp