கோவை மாவட்டம் ஆனைமலையில் சோமேஸ்வரர் கோயில் அருகே விநாயகர் சித்தர் பீடத்தில் செப்டம்பர் 12ஆம் தேதி நேற்று காலையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தூக்கிட்டு இறந்து கிடப்பதை கோவிலுக்கு சென்ற நபர் பார்த்துள்ளனர்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனை ஆனைமலை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார் தகவலறிந்து சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த ஆனைமலை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஒடையகுளம் பகுதியைச் சேர்ந்த சின்னசாமி வயது 55 என்ற நபர் என தெரிய வருகிறது.
இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைத்தனர். மேலும் இது பற்றி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-அலாவுதீன், ஆனைமலை.