எஸ்.புதூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை! காவல்துறையினர் விசாரணை!!

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், எஸ்.புதூர் அருகிலுள்ள ராஜாப்பட்டியை சேர்ந்தவர் திருப்பதி. இவருடைய மனைவி விஜயலெட்சுமி (வயது 55). கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலை 100 நாள் வேலைக்கு செல்வதற்காக வீட்டை பூட்டிவிட்டுச் சென்றுவிட்டார்.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டு கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, பீரோவை உடைத்து அதன் உள்ளே இருந்த 5 பவுன் நகை மற்றும் ₹10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இதற்கிடையே வீட்டிற்கு வந்த விஜயலெட்சுமி, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தார். அங்கு பீரோ திறக்கப்பட்டு துணிகள் சிதறி கிடந்தது.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

பீரோவில் இருந்த நகை, பணம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர் புழுதிபட்டி காவல்நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசித் தேடிவருகின்றனர்.

-ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp