கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளரை, ‘சஸ்பெண்ட்’ செய்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். பொள்ளாச்சி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளராக கலைச்செல்வி உள்ளார்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அரசு மருத்துவமனை பணிக்கு சரிவர வரவில்லை.பணி நேரத்துக்கு மருத்துவமனையில் இருப்பதில்லை.மாவட்ட சுகாதார கூட்டங்களில் பங்கேற்பதில்லை’ என, மாவட்ட நிர்வாகத்திடம் ஏற்கனவே புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் விபத்தில் காயமடைந்தவர்களை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த போது, கண்காணிப்பாளர் தாமதமாக பணிக்கு வந்துள்ளார். மாவட்ட கலெக்டர் சமீரன் ஆய்வின் போது இந்த விபரங்கள் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து விளக்கம் கேட்ட போது முறையான பதில் தெரிவிக்கவில்லை என, கூறப்படுகிறது.இதையடுத்து, கண்காணிப்பாளர் கலைச்செல்வியை ‘சஸ்பெண்ட்’ செய்து, மாவட்ட கலெக்டர் சமீரன் உத்தரவிட்டார். டாக்டர் கார்த்திக்கேயன், கண்காணிப்பாளராக பொறுப்பேற்றார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V. ஹரிகிரிஷ்ணன், பொள்ளாச்சி.