சிங்கம்புணரி அரசு மருத்துவமனை வளாகத்தில் குடிபோதையில் இருதரப்பினரிடைய மோதல்! 5பேர் காயம்! 10பேர் கைது!

சிங்கம்புணரி அருகே வேட்டையன்பட்டியைச் சேர்ந்தவர் முனியாண்டி (56). இவர் கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி மருதிப்பட்டியில் நடந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். மேலும், அவர் மீது மோதிய சரக்கு வாகனத்தின் ஓட்டுநர் பிரபு என்பவரும் அப்போது காயமடைந்ததால் இருவரையும் சிங்கம்புணரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருந்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முனியாண்டியை, அவரது மனைவி பாண்டியம்மாள் பாதி சிகிச்சை நிலையில் வீட்டுக்கு கொண்டு வந்திருக்கிறார். வீட்டிற்கு வந்த முனியாண்டி நேற்று காலையில் உயிரிழந்தார். வீட்டில் கிடத்தப்பட்டிருந்த முனியாண்டியின் சடலத்திற்கு மாலை போடுவது தொடர்பாக உறவினர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

முனியாண்டியின் இறப்பு குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர், அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மதுபோதையில் அங்கு வந்த உறவினர்கள் அரசு மருந்துவமனை வளாகத்தில் கல்லால் எறிந்தும், கட்டை, கம்புகளுடனும் தங்களுக்குள் தாக்கிக் கொண்டனர்.

இதில் காரைக்குடி ஓ.சிறுவயல் பகுதியை சுரேஷ்(35), கருத்த பாண்டி, வல்லரசு, கண்ணன் மற்றும் பிரபாகரன் ஆகியோர் காயமடைந்தனர். படுகாயமடைந்த சுரேஷ், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

இவர்களைத் தாக்கியதாக விராலிமலையைச் சேர்ந்த முத்து, கண்ணன், சக்திவேல்
கருப்பையா, ஆனந்த் , சேகர், சிவா, விஜய், பாரதி மற்றும் ஆறுமுகம் ஆகிய 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்த சிங்கம்புணரி காவல்துறையினர், அவர்களை கைது செய்து ராமநாதபுரம் கிளைச் சிறையில் அடைத்தனர்.

-ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp