சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள கருப்பர்கோவில்பட்டியைச் சேர்ந்த கருப்பையா மகன் வெள்ளைகண்ணு (வயது 25). அதே கிராமத்தை சேர்ந்த சின்னத்தம்பி மகன் மதியரசன் (வயது 25). இருவரும் நெருங்கிய நண்பர்கள்.
இவர்களில் வெள்ளைக்கண்ணு வெளிநாட்டில் வேலை செய்து திரும்பியவர். திருமணம் முடித்த இவர், மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
மதியரசன் திருமணமாகாதவர்.
நண்பர்கள் இருவருக்கும் மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இருவரும் தினசரி மது அருந்திவிட்டு அவரவர் வீட்டிற்கு வந்ததாகக் கூறப்படுகிறது. இருவரது தந்தையரும் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில், இருவரது உறவினர்களும் இவர்களை தொடர்ந்து கண்டித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதுகுறித்து மனமுடைந்த இணைபிரியா நண்பர்கள் இருவரும் நேற்று இரவு கருப்பர் கோவில்பட்டியில் உள்ள உறவினர் ஒருவரது வீட்டின் மாடியில் அமர்ந்து மது அருந்தியபோது, அதில் விஷம் கலந்து குடித்ததாகக் கூறப்படுகிறது. சிறிது நேரத்தில் வேதனையில் அலறிய அவர் களிருவரையும் சென்று பார்த்த உறவினர்கள், உடனடியாக எஸ்.வி.மங்கலம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அவர்கள் இருவரும் மரணமடைந்த நிலையில், காவல் ஆய்வாளர் விஜயன் தலைமையிலான காவல்துறையினர் இருவரின் உடலைகளைக் கைப்பற்றி, சிங்கம்புணரி அரசு தாலுகா தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து மது அருந்தி வந்ததில் மதியிழந்த நண்பர்கள் இருவர், அதே மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது கருப்பர் கோவில்பட்டி கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
– பாரூக், சிவகங்கை.
One Response
SUPER NEWS