சிங்காநல்லுார், நேரு நகர் பகுதியில் தனியார் மில் உள்ளது. இந்த மில் சுற்றுச்சுவர் அருகே நேற்று காலை, 50-55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், தலையில் காயங்களுடன் சடலமாக கிடந்தார்.
இதுகுறித்து போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சடலமாக கிடந்தவர் தலையில் கல்லால் தாக்கப்பட்ட காயங்கள் இருந்தது தெரியவந்தது. சடலமாக கிடந்தவர் யார் என்பதும் எந்த ஊரை சேர்ந்தவர் போன்ற தகவல்கள் தெரியவில்லை.
போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை, சேகரித்து ஆராய்ந்து வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-அருண்குமார், கிணத்துக்கடவு.