தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனையில், தொண்டாமுத்தூர் மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து நாள்தோறும் 400க்கும் மேற்பட்ட புற நோயாளிகளும், 30க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில், உள்நோயாளிகள் பிரிவு கட்டடத்தின் பின்புறம் முழுவதும், ஆள் உயரத்திற்கு புதர் நிறைந்துள்ளது. இதனால் இப்பகுதியில், பாம்புகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகிறது.
அரசு மருத்துவமனையில், நோய் குணமடைய வேண்டி வரும் நோயாளிகளை, விஷப்பூச்சிகள் தீண்டும் ஆபத்தான நிலை உள்ளது.
எனவே, மருத்துவமனை நிர்வாகம் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினர் இணைந்து மருத்துவமனை வளாகத்திற்குள் உள்ள புதர்களை அகற்றி சுத்தம் செய்து, நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்கின்றனர் நோயாளிகள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.