பட்டமங்கலம் மதியாத கண்ட விநாயகர், அழகு சௌந்தரி அம்பாள் கோவிலுக்கு 17 ஆண்டுகளுக்குப் பிறகு குடமுழுக்கு விழா!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், கல்லல் ஒன்றியம், அடைக்கலம் காத்த பட்டமங்கலத்தில் உள்ள மதியாத கண்ட விநாயகர் – அழகு சௌந்தரி அம்பாள் திருக்கோவில், 17 ஆண்டுகளுக்குப் பிறகு புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு விழா எதிர்வரும் வியாழனன்று
(8/9/22) பெரும் விமரிசையாக நடைபெற உள்ளது.

இவ்விழாவிற்கு முன்னதாக மூன்று நாட்கள், நான்கு கால பூஜைகள் கணபதி ஹோமத்துடன் தொடங்கப்பட்டு யாக பூஜைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து வருகின்ற வியாழக்கிழமை (8/9/22) அன்று காலை 9 மணிக்கு தீப ஆராதனை காட்டப்பட்டு, அதன் தொடர்ச்சியாக கடம் புறப்பாடு நடைபெற்று, 9.30 மணியிலிருந்து 10.30 மணிக்குள் கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சி நடைபெறும்.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்த குடமுழுக்கு விழாவில் சிறப்புவிருந்தினராக ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் மற்றும் குன்றக்குடி தவத்திரு.பொன்னம்பல அடிகளார் மற்றும் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் மேதகு ராணி D.S.K.மதுராந்தக நாச்சியார் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

மேலும் விழாவை முன்னிட்டு புதன்கிழமை இரவும், வியாழக்கிழமை காலையும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பட்டமங்கலம் நாட்டார்கள் மற்றும் நகரத்தார்கள் ஸ்தாணிகர்கள் மற்றும் திருப்பணிக் குழுவினர்கள், ஊர் பொதுமக்கள் மேற்கொண்டு வரும் நிலையில் குடமுழுக்கு விழாவில் பங்கேற்று சாமி தரிசனம் பெற்றுச் செல்ல, பக்தகோடிகளுக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பிலும் விழா குழு சார்பிலும் அழைப்பு விடுத்துள்ளனர்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

இக்கோவிலானது மாவட்டத்தில் உள்ள வழிபாட்டுத் தலங்களில் மிகப்பிரசித்தி பெற்ற தலமாகக் கருதப்படும் காரணத்தினால், குடமுழுக்கு நிகழ்விற்கு அதிக அளவில் பக்தர்கள் வருகை தரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

– பாரூக், சிவகங்கை.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp