தமிழக அரசு பயணிகளின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பாக பேருந்து வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்கள். பயணிகளும் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்ல பேருந்துசதிகளை பயன்படுத்தி வருகிறார்கள்.
இதில் பல வகையான வசதிகள் கொண்ட பேருந்துகளை நாம் பார்த்திருப்போம். அதிக தூரம் செல்லும் பேருந்தில் பயணிகள் படுத்துக்கொண்டே செல்லும் வசதி வரை தற்போது வந்து விட்டது. டீலக்ஸ், சூப்பர் டீலக்ஸ், அல்ட்ரா டீலக்ஸ் போன்ற வசதிகளை நாம் பார்த்திருப்போம் சென்றிருப்போம் அல்லது கேள்வியாவது பட்டிருப்போம்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அது போலத்தான் தற்பொழுது திண்டுக்கல் மாநகரில் ஒரு பேருந்தை பார்த்து பயணிகள் பிரமித்து போய் உள்ளார்கள். அது என்னவென்றால் மழைக்காலங்களில் பேருந்தில் பயணிகள் யாரும் உட்கார்ந்து பயணம் செய்ய முடியாது. நின்றுகொண்டும், தலைக்கு மேல் போர்த்திக் கொண்டும் தான் பயணம் செய்ய முடியும் அப்படி ஒரு சிறப்பான பேருந்து.
ஒரு பஸ்சுக்குள் ஒன்பது இடத்தில் ஒட்டு போட்டு உள்ளார்கள். மழை பெய்யும் போது பஸ்சுக்குள் குடை பிடித்தால் தான் நாம் மழை நீரில் நனையாமல் பயணம் செய்யமுடியும். மழை பெய்யும் சமயங்களில் எந்த இடத்தில் இருந்து நீர் ஒழுகவில்லை என்பதை கண்டுபிடிப்பதே பெரும் சவாலாக உள்ளது. பேருந்தின் மேல் கூரை ஓலை குடிசை போன்று ஒழுகுகிறது.
எனவே பயணிகளின் நலன் கருதி இதுபோன்ற “சிறப்பு” பேருந்துகளை இயக்காமல் மழைக்காலங்களில் பஸ்சுக்குள் குடை பிடித்து பயணம் செல்லாதபடி ஒழுகாத நல்ல நிலையில் இயங்கும் சுமாரான பேருந்துகளை இயக்கும்படி பயணிகள் கோரிக்கை வைக்கிறார்கள்.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனைகளில் இதுபோன்று குறைபாடுகள் உள்ள பேருந்துகளைை இயக்காமல் இருக்க வேண்டும். அல்லது இதுபோன்ற குறைபாடுகள் உள்ள பேருந்துகளை பணிமனை அதிகாரிகள் சிறந்த முறையில் சரி செய்து இயக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.