கோவை மாவட்டம் பொள்ளாச்சி நேதாஜி ரோட்டில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில்
ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
ஆண்டு தோறும் செப்டம்பர் 5 ம் தேதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ச.தர்மராஜ் தலைமை தாங்கினார்.
பெற்றோர் ஆசிரியர் சங்க செயலாளர் ஜெய்னுலாப்தீன் துணை தலைவர் காளிமுத்து துணைச்செயலாளர் கவிஞர் பொள்ளாச்சி முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளி தலைமையாசிரியர் அ.கோமதி வரவேற்று பேசினார்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களுக்கும் பொன்னாடை அணிவித்தும் இனிப்பு வழங்கப்பட்டது. நேதாஜி இளைஞர் பேரவை தலைவர் வெள்ளை நடராஜ் அனைவருக்கும் மரக்கன்று வழங்கியும் வாழ்த்து தெரிவித்தார்.
இதில் பள்ளி ஆசிரியர்களுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் பள்ளி மாணவிகள் பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தனர். இதில் குறிப்பாக பள்ளியில் பணிபுரியும் துப்பரவு தொழிலாளர்களுக்கும் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இறுதியில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவிகள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பள்ளி ஆசிரியை சொர்ணலட்சுமி ஆசிரியர் தினம் குறித்து கவிதை வாசித்தார். இறுதியில் பள்ளி ஆசிரியை கோமதி சங்கரி நன்றியுரையாற்றினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.