பொள்ளாச்சி ஜமீன் ஊத்துக்குளி செண்பகம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக கடித தின விழா!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஜமீன் ஊத்துக்குளியில் உள்ள செண்பகம் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் உலக கடித தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் கடிதம் எழுதும் விழா நடைபெற்றது.

செப்டம்பர் முதல் நாளை ஆண்டு தோறும் உலக கடித தினமாக கொண்டாடப்படுகிறது.
இதை முன்னிட்டு செண்பகம் பள்ளியில் சிறப்பான கடித திருவிழா 2022 நிகழ்ச்சி நடைபெற்றது.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிகழ்ச்சியில் தலைமையுரையை பள்ளி தாளாளர் ஜான்சன் வழங்கினார். பள்ளிமுதல்வர் மேக்டலின் அவர்கள் வரவேற்று பேசினார்.

இதில் பள்ளி மாணவர்களிடையே பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், என்ஜிஎம் கல்லூரி முதல்வர் டாக்டர்.முத்துக்குமரன், முன்னாள் தலைமையாசிரியர் சங்கரவடிவேல், ஜமீன் ஊத்து குளி பேருராட்சி தலைவர் அகத்தூர் சாமி, கவிஞர் பொள்ளாச்சி முருகானந்தம், நேதாஜி இளைஞர் பேரவை தலைவர் வெள்ளை நடராஜ் ஆகியோர் பேசினர்.

இதில் பேரூராட்சி துணைத் தலைவர் அபுதாஹிர், முனைவர் அப்துல்சமது, பேரூராட்சி துணைச்செயலாளர் ஆறுமுகம், நகராட்சி கவுன்சிலர்கள் உமா, கவிதா, நிலா பர் நிஷா மற்றும் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் தமிழ் ஆசிரியர் மலர்விழி நன்றி கூறினார்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp