திராவிட முன்னேற்றக் கழகத்தில் கடந்த சில வாரங்களாக கட்சியின் மாநில,மாவட்ட, நகர, கிளை பொறுப்பாளர்கள் தேர்வு அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதன் அடிப்படையில் மாநில பொதுக்குழு உறுப்பினராக கோவை மாவட்டம் பொள்ளாச்சி, பணிக்கம்பட்டி ஊராட்சி மன்ற தலைவரும் பணிக்கம்பட்டி திமுக கிளை செயலாளருமான முத்துசாமி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பணிக்கம்பட்டி ஊராட்சியில் கடந்த மூன்று முறை ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்று தனது நிர்வாக திறமையால் தனது கிராமத்திற்கு பல்வேறு திட்டங்களை மக்களுக்கு சேர்த்துள்ளார்.
குறிப்பாக அனைத்து வீதிகளிலும் தெருவிளக்கு குடிநீர் மற்றும் சாலை வசதிகளை திறன்பட செய்துள்ளார். மேலும் எளிமையான பேச்சுனாலும் மென்மையான செயல்பாடுகளாலும் மக்களிடையே பேரன்பை பெற்றுள்ளார்.
இது குறித்து அந்தப் பகுதி மக்களிடம் விசாரித்த போது சரியான மனிதருக்கு சரியான அங்கீகாரம் என்று புகழாரம் சூட்டியுள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V.ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.