தமிழக முன்னாள் முதல்வரும், கழக இடைக்கால பொதுச் செயலாளருமான. தமிழக சட்டமன்ற பேரவை எதிர்கட்சித்தலைவர் மாண்புமிகு எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் ஆனைக்கிணங்க அதிமுக கட்சியின் சார்பாக இன்று, தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர் மாண்புமிகு கடம்பூர் செ.ராஜூ சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தலைமையில் கோவில்பட்டி பேருந்து நிலையம் முன்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கடம்பூர் ராஜூ அவர்கள் பேசியது:
“மின் கட்டணம் உயர்வு மட்டும் அல்லாமல் மின்சார சேவை கட்டணம் மற்றும் வைப்புத் தொகையும் இந்த விடிய அரசு உயர்த்தி உள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் ஏழைகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கியது. இப்போது அந்த திட்டத்திற்கு ஆப்பு வைத்துள்ளது.”
மேலும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு கடம்பூர் ராஜூ அவர்கள் சாவல் : மாவட்ட கவுன்சிலர்களை பணம் அல்லது வேற காரணமாக விலைக்கு வாங்குவது நிறுத்துங்கள். மக்களுக்கு நல்லது பன்ற வேலையை பாருங்கள் இதுவரை கடந்த அதிமுக ஆட்சியில் உள்ள திட்டங்கள் இதுவரை அமைச்சர் மற்றும் முதல்வர் திறந்து வைக்கின்றனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மோகன் அவர்கள் மற்றும் விளாத்திகுளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.