மின் வாரியம் அனுப்பும் குறுஞ்செய்தியைப் போன்று மோசடி கும்பலால் அனுப்பப்படும் குறுஞ்செய்திகள்!! பொதுமக்களே உஷார்!!!

மின் கட்டணம் செலுத்த குறிப்பிட்ட எண்ணில் தொடர்பு கொள்ளவேண்டும் என்றோ, மின் இணைப்பு துண்டிக்கப்படும் இந்த இணைப்பில் வங்கி விபரம் பதிவு செய்ய வேண்டும் என்றோ குறுஞ்செய்தி வந்தால் பொதுமக்கள் உஷாராக இருக்கவேண்டும் என மின்வாரியத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தொழில்நுட்ப வளர்ச்சியின் பெரிய பாதிப்பாக சைபர் கிரைம் குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

வங்கியில் இருந்து தொடர்பு கொள்வதாக பல்வேறு காரணங்கள் கூறி கிரெடிட், டெபிட் அட்டைகளின் எண்கள் கேட்டும், ஆதார், பேன் அட்டை விபரங்கள் கேட்டும் பல்வேறு மோசடிகள் அரங்கேறி வருகினறன. பலமுறை போலீசார் எச்சரித்தும் ஏமாறும் பொதுமக்கள் தற்போதும் இருக்கின்றனர்.

Please Subscribe This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இந்நிலையில், சமீபகாலமாக மின்வாரியத் துறையிடம் இருந்து குறுஞ்செய்தி வருவது போல், மொபைல் எண்ணுக்கு அனுப்பி, வங்கி கணக்கிலுள்ள பணத்தை களவாடும் புகார்கள் அதிகரித்துள்ளன. ஒவ்வொரு மின் இணைப்பு தாரருக்கும் மின் கணக்கீடு செய்யப்பட்ட உடன், எவ்வளவு மின் பயன்பாடு அதற்கான தொகை எவ்வளவு, எத்தனை நாட்களுக்குள் செலுத்த வேண்டும் என்ற விபரங்களை பதிவு செய்துள்ள மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தியாக மின்வாரியம் அனுப்புவது வழக்கம்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

இதை அடிப்படையாக கொண்டு சில போலியான குறுஞ்செய்திகள் மொபைல் எண்ணிற்கு மோசடி பேர்வழிகள் அனுப்பி வைக்கின்றனர். அந்த குறுஞ்செய்தியில், தாங்கள் மின் கட்டணம் செலுத்தாததால் தங்களுடைய மின் இணைப்பு தடை செய்யப்படும். அதனால் தங்களது வங்கி விபரங்களை சமர்ப்பியுங்கள், மேலும் அவர்கள் குறிப்பிட்டுள்ள மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் என்று போலியான குறுஞ்செய்திகளை பலருக்கு வந்துள்ளதாக புகார்கள் பதிவாகியுள்ளன.

இது போன்ற குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம். அது போலியானது. தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் மூலம் இது போன்ற குறுஞ்செய்திகள் எப்போதும் மின் உபயோகிப்பாளர்களுக்கு அனுப்புவதில்லை என மின்வாரியம் எச்சரித்துள்ளது.மின்வாரியம் தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால், 9498794987 என்ற மொபைல் எண்ணில் மட்டும் தொடர்பு கொண்டு தகவல்களை கேட்கலாம்.

இது குறித்து மின்வாரிய உயர் அதிகாரிகள் கூறுகையில்,” மின்வாரியம் அனுப்பும் குறுஞ்செய்தியில் வங்கி சார்ந்த விபரங்கள் கேட்கப்படாது. தவிர, எந்த எண்ணிலும் தொடர்புகொள்ள தெரிவிக்கப்படாது. பொதுமக்கள் உஷாராக இருக்கவேண்டும். கடந்த வாரங்களில் இதுபோன்று பலர் குறுஞ்செய்தி வந்ததாக புகார் அளித்துள்ளனர்,” என்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp