பன்னாட்டு லயன்ஸ் சங்கம் 324-C, நேரு நகர் லயன்ஸ் சங்கம், கலாம் மக்கள் அறக்கட்டளை மற்றும் FAIRA அமைப்பினர் இணைந்து தொடர்ந்து பல்வேறு சமூக நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பன்னாட்டு லயன்ஸ் சங்கம் 324 Cன் மக்கள் தொடர்பு மாவட்ட தலைவர் மற்றும் வட்டாரத் தலைவர், கலாம் மக்கள் அறக்கட்டளையின் நிறுவனர், FAIRA அமைப்பின், தேசிய துணைத் தலைவர், என் நிலம் பில்டர்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர், தேஜஸ் அசோசியேட்ஸ் உரிமையாளர் என பல்வேறு பொறுப்புகளை வகிக்கும் அரிமா செந்தில் குமார் தொடர்ந்து தினந்தோறும் சேவை திட்டங்களையும் பல்வேறு மக்கள் நல பணிகளையும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தனது திருமண நாளை கொண்டாடும் விதமாக ‘மகிழ்வித்து மகிழ்’ என கோவை அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பொதுமக்கள் என சுமார் ஐநூறு பேருக்கு மதிய உணவு வழங்கினார்.
தனது திருமண நாளை முன்னிட்டு அவரது மனைவி கவிஞர் தேஜஸ் சுப்பு உடன் இணைந்து அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு உணவு வழங்கியது அனைவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிகழ்ச்சியில் அவரது நண்பர்கள் மோகன்ராஜ், ஜகந்நாதன், கிரீஸ், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர். திருமண நாளன்று அவர் செய்த இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
– சீனி, போத்தனூர்.