அதிகரித்து வரும் வாகன நெரிசல் கேரளா மாநிலத்தில் மிகவும் முக்கியமான சுற்றுலாத்தலமாக கருதப்படும் இடுக்கி மாவட்டம் மூணார் பகுதியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்லுவது வழக்கம்.
Please Subscribe This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஓணம் மற்றும் தென் மேற்கு பருவ காலநிலையை கொண்டாடும் விதமாக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதே நேரத்தில் சுற்றுலாவின் முக்கியமான மாட்டுப்பட்டி, எக்கோ பெயிண்ட்,குண்டலை மற்றும் டாப் சிலிப் போன்ற பகுதிகளில் அதிகமான போக்குவரத்து நெறிசல் ஏற்படுகின்றன.
இதனால் சுற்றுலா பயணிகள் பல மணிநேரங்கள் காத்திருக்க நேரிடுகிறது .எனவே சுற்றுலா பயணிகள் வந்து பார்க்க வேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர் . எனவே கேரளா சுற்றுலா மேம்பாட்டு துறை இதற்கான தீர்வை உடனடியாக காண வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.