கோவை மாவட்டம் போத்தனூர் செட்டிபாளையம் 99 வது வார்டு ஸ்ரீராம் நகர் பகுதியில் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் இன்று கோவை மாநகராட்சி கமிஷனர் துணை மேயர் மற்றும் கவுன்சிலர்கள் ஆய்வு மேற்கொண்டனர் அப்பொழுது அங்கு வந்த மாநகராட்சி கமிஷனரிடம் ஸ்ரீராம் நகர் அருள்முருகன் நகர் குடியிருப்போர் சங்கத்தின் செயலாளர் சாதிக் அந்தப் பகுதியில் உள்ள பிரச்சனையை எடுத்துரைத்தார்.
குடிநீர், 22 நாட்களுக்கு ஒரு முறை வருவதாகவும் அதனால் மிகவும் பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருவதாகவும் வெள்ளலூர் குப்பை கிடங்கில் இருந்து துர்நாற்றம் வீசுவதும். ஈக்கள், கொசுக்கள் போன்ற பிரச்சனைகளால் நோய் பரவலை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதையும் அங்குள்ள பூங்கா பராமரிப்பு இல்லாமல் இருப்பதை மக்கள் கூறுவதையும் மனுவாக அங்கு வந்த மாநகராட்சி கமிஷனரிடம் சங்கத்தின் செயலாளர் சாதிக் ஒப்படைத்தார்.
மனுவை பெற்றுக் கொண்ட கமிஷனர் அதிவிரைவில் நீங்கள் கூறும் பிரச்சினைகளை சரி செய்து நடவடிக்கை எடுப்பேன் என்று கூறிவிட்டு அங்கிருந்து அங்கிருந்து சென்றனர். மேலும் இந்த ஆய்வில் துணை மேயர் மற்றும் 96 வது மாமன்ற உறுப்பினர் குணசேகரன் 99 வது மாமன்ற உறுப்பினர் அஸ்லாம் பாஷா உடன் இருந்தனர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திக்காக,
தலைமை நிருபர்,
-ஈசா.