கோவை மாவட்டம் பொள்ளாச்சி சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட 12வது வார்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வடிகால் சீரமைக்கும் பணி நடைபெற்றது. அப்பொழுது அங்குள்ள ஆழ்குழாய் கிணற்றை மக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு கான்கிரீட் போடப்பட்டுள்ளதால் அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஆழ்துளைக் கிணற்றை பயன்படுத்த முடியாத நிலைக்குக் கொண்டு சென்ற நபர்கள் மீது சம்பந்தப்பட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் இதை உடனடியாக சரி செய்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இச்சம்பவம் பொள்ளாச்சி பகுதி மட்டுமின்றி சமூக வலைதளங்களில் பேசும் பொருளாக உருவெடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-M.சுரேஷ்குமார்.