இணையதளம் வழியாக கடன் செயலி மூலம் இந்தியா முழுவதும் கோடிக் கணக்கில் மோசடி செய்த 2பேரை தூத்துக்குடி மாவட்ட தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
டிஜிட்டல் திருட்டு வழக்குள் இந்தியாவில் அதிகரிப்பு. கடந்த மாதம் சென்னையில் கடைகளில் பார்கோடு திருட்டு தானாமாக கடைகளில் ஒட்டி பண பரிமாற்ற செய்து லட்சக்கணக்கில் மோசடி. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தெப்பக்குளம் தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் சௌந்தரராஜன் என்பவருடைய முகநூல் பக்கத்தில் கடந்த 13.09.2022 அன்று Monzo என்ற பெயரில் இணையதள வழி கடன் செயலி விளம்பரம் இருந்ததாகவும், அதை பார்த்த அவருக்கு கடன் தேவைப்பட்டதால் அதில் இருந்த இணைப்பை கிளிக் செய்து அந்த இணைய வழி கடன் செயலியை பதிவிறக்கம் செய்து அதில் சௌந்தரராஜன் தனது பெயர், முகவரி, வங்கி கணக்கு விபரம் ஆகியவற்றை பதிவு செய்து ரூ.3 லட்சத்திற்கு கடன் கேட்டு விண்ணப்பித்துள்ளார்.
பின்னர் +855-715094841 என்ற எண்ணிலிருந்து சௌந்தரராஜனின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட அடையாளம் தெரியாத நபர் அவரிடம் கடன் ஏற்பாடு செய்வதாக சொல்லி loan Processing Charge, Account clearing charge உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி சௌந்தரராஜனை ஏமாற்றி, அவரிடமிருந்து ரூ.1லட்சத்து 35ஆயிரம் பணம் பெற்று மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து சௌந்தரராஜன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் நடவடிக்கை எடுக்க தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் லயோலா இக்னேஷியஸ் மேற்பார்வையில் சைபர் குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் சிவசங்கரன் தலைமையில் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அதன்பேரில் தனிப்படை போலீசார் தொழில் நுட்ப ரீதியாக விசாரணை மேற்கொண்டு, தென்காசி மாவட்டம் வெள்ளக்கால் பகுதியைச் சேர்ந்த வெள்ளையப்பன் மகன் பாலசுப்பிரமணியன் (27) என்பவரை அவருடைய செல்போன் Location வைத்து கடந்த 13.10.2022 அன்று கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் போலியான நிறுவனம் மற்றும் போலியான வங்கி கணக்குகள் உருவாக்கி குற்றத்திற்கு உடந்தையாக இருந்த தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தலைவன் கோட்டை பகுதியைச் சேர்ந்த பரமசிவம் மகன் முத்துராஜ் (32) என்பவரை தென்காசியில் வைத்தும் தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் விசாரணையில் இவர்கள் பயன்படுத்திய 3 வங்கி கணக்குகளை ஆய்வு செய்ததில் இவர்கள் இந்தியா முழுவதும் பலரிடம் ஏமாற்றி ரூ.4 கோடிக்கு மேல் மோசடி செய்ததும் தெரியவந்தது.
மேலும் இதுதொடர்பான குற்ற செயலுக்கு உடந்தையாக இந்தியா முழுவதும் நெட்வொர்க் இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சைபர் குற்றப் பிரிவு போலீசார் 2 பேரையும் நேற்று தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பேரூரணி மாவட்ட சிறையில அடைத்தனர். மேலும் இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இணைவழி கடன் செயலி மூலம் பண மோசடியில் ஈடுபட்ட எதிரிகளை கைது செய்த சைபர் குற்றப்பிரிவு போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டினார்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.