கீழச்சீவல்பட்டியில் தேசிய ஆயுர்வேத மருத்துவதினம்!

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், கீழச்சீவல்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் ஆயுர்வேத மருத்துவப் பிரிவின் சார்பாக தேசிய ஆயுர்வேத மருத்துவ தினம் கொண்டாடப்பட்டது.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

ஏழாம் ஆண்டு தேசிய ஆயுர்வேத மருத்துவ தினத்தையொட்டி (23-10-22) கீழச்சீவல்பட்டி எஸ்.எம்.எஸ். மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்களிடயே ஆயுர்வேத மருத்துவம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி 18/10/22 அன்று நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் சிவகங்கை மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் பிரபாகரன் அவர்கள் தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் முன்னிலை வகித்தார். ஆயுர்வேத மருத்துவ அலுவலர் பிரியங்கா நிகழ்ச்சி ஏற்படுகளை செய்திருந்தார்.

நிகழ்ச்சியில் ஆயுர்வேத மருத்துவம் மற்றும் உடல் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வு உண்டாகப்பட்டது. நிகழ்ச்சியில் ஐநூறுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுடன், ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp