கோவையில் மாநில கல்வி கொள்கைக்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்கும் கூட்டம்.
மாநில கல்வி கொள்கையை உருவாக்கிட தமிழக அரசு டெல்லி உயர் நீதி மன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி முருகேசன் மற்றும் கல்வித்துறை வல்லுநர்கள் கீழ் உயர் மட்ட குழு ஒன்றை உருவாக்கியுள்ளது.
இந்த குழு தமிழக கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர்கள் மற்றும் செயல் அதிகாரிகளுடன் மாநில கல்வி கொள்கைக்கான பரிந்துரைகளை கேட்பதுடன் கலந்தாலோசனையும் மேற்கொண்டு அவற்றை வைத்து மாநில கல்வி கொள்கையின் வரைவு அறிக்கையை தயாரிக்க உள்ளது.
இதன் ஒரு பகுதியாக கோவையில் இன்று தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை வரையறை செய்கின்ற குழு உறுப்பினர்கள் அதன் தலைவர் டி. முருகேசனுடன் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் உள்ள 30க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் தலைவர்கள் மற்றும் தலைமை செயல் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து, அவர்களின் கருத்துக்களை நேரில் பெற்றனர்.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில் கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி கலந்து கொண்டு பேசும் போழுது, பொறியியல் கல்லூரியின் பாடத்திட்ட வரைமுறை என்பதில் மத்திய அரசின் வெளிப்பாடுகளுக்கும், மாநில அரசின் வெளிப்பாடுகளுக்கும் பல்வேறு வேறுபாடுகள் உள்ளது. இதில் பொறியியல் கல்லூரி எவற்றை பின்பற்றுவது என்ற கருத்து வேறுபாடு சமீப காலமாகவே இருந்து வருகின்றது. இது குறித்த தெளிவான அறிக்கை தேவை என்று பேசினார்.
மேலும் தன்னுடைய ஆலோசனைகளை மாநில கல்விக் கொள்கை வரையறை செய்கின்ற குழு தலைவரிடம் சமர்ப்பித்தார்.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில், கோயமுத்தூர் பொறியியல் கல்லூரி கூட்டமைப்பின் தலைவரும் எக்ஸெல் கல்லூரியின் தலைவர், டாக்டர் நடேசன், கற்பகம் பொறியியல் கல்லூயின் தலைமை செயல் அதிகாரி, முருகையா, எஸ்என்எஸ் பொறியியல் கர்லூரியின் தலைவர் சுப்ரமணியம், ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் தலைமை செயல் அதிகாரி ராம்குமார், ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியின், தலைமை செயல் அதிகாரி சுந்தரராமன் என பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திக்காக,
– சீனி,போத்தனூர்.