கோவை, உக்கடம் பேருந்து, நிலையம், செயல்பட்டு வந்த மதுபான கடை பல்வேறு காரணங்களால் அந்த பகுதியில் இருந்து நீக்கப்பட்டது. அவ்வாறு நீக்க பட்ட அந்த கடை மீண்டும் அதே இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க பட்டு வருவதாக இன்று தகவல்கள் பரவியதை தொடர்ந்து.
இன்று தமுமுக, மமக, மஜக உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் பல்வேறு இஸ்லாமிய ஜமாத்துகள் அரசியல் கட்சி தலைவர்கள் தலைமையில் சம்பவ இடத்திற்கு நேரடியாக வந்து பார்வையிட்டு இங்கு மீண்டும் மதுபான கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து இந்த பகுதயில், இந்த தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் கடையின் உரிமையாளரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். முடிவாக இந்த பகுதியில் பல்வேறு பொதுமக்கள் வசித்துவருகின்றனர். அவர்களுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் ஆரம்பிக்க பட உள்ள இந்த கடை முற்றிலும் இந்த பகுதியில் திறக்கப்படாது என்று அனைத்து நிர்வாகிகளும் தெரிவித்தனர்.
இதனை ஏற்று அனைத்து அதிகாரிகளும் இங்கு கடை வராது என்று வாக்குறுதி அளித்தனர். மேலும் இங்கு கடை திறப்பதற்கு மேற்கண்ட நடவடிக்கை எடுத்தால் தமுமுக உள்ளிட்ட அனைத்து ஜமாத்கள் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டம் ஜனநாயக ரீதியில் நடைபெறும் என்று தெரிவித்தனர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த நிகழ்ச்சியில் மமக மாவட்ட தலைவர் சரப்புதின் கோவை மாநகராட்சி 86 வது வார்டு கவுன்சிலர் அகமது கபீர் தமுமுக மாவட்ட செயலாளர் முஜீப் ரஹ்மான் மஜக மாவட்ட பொருளாளர் அப்பாஸ் தமுமுக மமக மாவட்ட துணை செயலாளர்கள் நூர்தின், சாகுல், ஆஷிக் அஹ்மத் உள்ளிட்ட ஏராளமான ஜமாத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடதக்கது.
– சீனி, போத்தனூர்.