ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் 20 ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் வெகுவிமரிசையாக நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவின் நிகழ்வுகள் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவரும் நிர்வாக அறங்காவலருமாகிய எஸ் மலர்விழி துவக்கி வைத்தார். கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள் அறங்காவலர் ஆதித்யா பங்கேற்று விழாவை சிறப்பித்தார்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜே. ஜேனட் அனைவரையும் வரவேற்று கல்லூரியின் 2020 – 2021 வருடத்திற்க்கான ஆண்டு அறிக்கையை சமர்ப்பித்தார்.
பாஷ் குளோபல் சாப்ட்வேர் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் முதுநிலை இயக்குனர் திரு. அமித் குமார் இவ்விழாவின் தலையை விருந்தினராக கலந்துக்கொண்டு பட்டமளிப்பு விழா சிறப்புரையாற்றினார்.
தலைமை விருந்தினர் 1281 பட்ட சான்றிதழ்களை மாணவர்களுக்கு வழங்கினார். கல்வியில் மிகச்சிறந்து விளங்கிய உயர் மதிப்பெண்கள் பெற்ற 30 மாணவர்கள் தலைமை விருந்தினரிடப் வாழ்த்துப் பெற்றனர்.
இவ்விழாவில் ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் சுல்லூரியின் பல்வேறு துறைகளின் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். அனைவரின் பங்களிப்புடன் சிறப்பாக நடைபெற்றது.
– சீனி, போத்தனூர்.