2021 ஆம் ஆண்டில் பட்டப்படிப்புகளை நிறைவு செய்த 2011 பேருக்குப் வழங்கும் பட்டமளிப்பு விழா குமரகுரு வளாகத்தில் உள்ள இராமானந்த அடிகளார் அரங்கில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது, மூன்று அமர்வுகளைக் கொண்ட இதில் அம்மவர்களில் பிஇ , பிடெக். எம்இ, எம்டெக் எம்பிஏ. எம்சிஏ ஆகிய படிப்புகளை முடித்தவர்கள் பட்டச்சான்றிதழ்களைப் பெற்றனர்
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
குமாரு கல்வி நிறுவனங்களின் இணைத்தாளாளர் சங்கர் வாணவராயரின் வரவேற்புரையுடன் பட்டமளிப்பு விழா தொடங்கியது. அவரைத் தொடர்ந்து, குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் டி சரவணன், நிறுவனத்தின் சாதனைகளையும் எதிர்காலத்திட்டங்களையும் விளக்கும் அறிக்கையை வாசித்தார், தொடர்ந்து சிறப்பு விருந்தினரின் உரையும் பட்டங்களை வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றது.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா லிமிடெட் ஆட்டோமோட்டில் டெக்னாலஜி & தயாரிப்பு மேம்பாட்டுத் தலைவர் ஆர் வேலுச்சாமி காலை அமர்விற்கான பட்டமளிப்பு விழாவின் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்தார், மஹிந்திரா நிறுவனத்தின் சக்தி மிக்க டீஸல் இயந்திரத்தின் தலைமை அமைப்பாளரான அவரது வருகையும் உரையும் பட்டம்பெறும் இளையோர்களுக்கு ஊக்கமளிக்கும் ஒன்றாக அமைந்தது.
பிற்பகல் அமர்வில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிசி) முன்னாள் தலைவர் டாக்டர் எஸ். கிறிஸ்டோபர் சிறப்புவிருந்தினராகக் கலந்துகொண்டு பட்டங்களை வழங்குகிறார். வான்வழி முன்னெச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பின் (AWACS) திட்ட இயக்குநராகவும், தலைமைய பொறியாளராகவும் சிறப்பான பங்களிப்புச் செய்தவர் அவரது பங்கேற்பம். வருகையும் இளம் பட்டதாரிகளுக்கு உற்சாகமும் ஊக்கமும் அளிக்கக்கூடியதாக, அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
– சீனி, போத்தனூர்.