தூத்துக்குடியை உலுக்கிய கள்ளக்காதல் கொலை!!

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த மீன் வியாபாரி எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது மனைவி, மகள் மற்றும் மகளின் காதலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் காமநாயக்கன்பெட்டி அருகில் குருவிநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சவரிமுத்து மகன் ஞானசேகரன் இவருக்கு வயது 42 . மீன் வியாபாரம் செய்து வந்த இவருக்கு ராணி என்ற மனைவியும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இவரின் வீட்டின் அருகே கருப்பசாமி என்ற கார்த்திக் மரப்பட்டைறை நடத்தி வந்தார் இவருக்கு வயது 24. ராணிக்கும் கார்த்திக் நிண்ட நாட்களாக கள்ளக்காதல் இருந்தாக தெரிகிறது. இதற்கு இடையில் ஞானசேகரனின் மூத்த 16வயது மகளை கார்த்திக் கடந்த 6 மாதமாக காதலித்து வந்துள்ளனர். இந்த காதலுக்கு ஞானசேகரன் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

இந்த நிலையில் பசுவந்தனை உள்ள தனியார் காற்றாலைக்கு செல்லும் சாலை அருகே உள்ள கிடங்கில் எரிந்த நிலையில் ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவல் அறிந்து, மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன், மணியாச்சி டிஎஸ்பி லோகேஸ்வரன் மற்றும் பசுவந்தனை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றினர்.

விசாரணையில், உயிரிழந்தவர் காமநாயக்கன்பட்டி அருகே குருவி நத்தம் கிராமத்தைச் சேர்ந்த மீன் வியாபாரி ஞானசேகரன் என தெரியவந்தது. அவர் ஏன் கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பல அதிர்ச்சிக்கர தகவல்கள் கிடைத்துள்ளது.

42 வயதான ஞானசேகரன் இவருக்கு ராணி என்ற மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். ஞானசேகரன் வீட்டருகே கருப்பசாமி (எ) கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். கார்த்திக்கும், ஞானசேகரன் மனைவி ராணிக்கு திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல், கார்த்திக்கும், ஞானசேகரன் 16 வயது மூத்த மகளும் காதலித்து வந்துள்ளனர். இந்த இரண்டு காதல் விஷயமும் ஞானசேகரன் ஒரு கட்டத்தில் தெரியவந்தது. இதனால், இரண்டு பேரையும் ஞானசேகரன் கண்டித்துள்ளார். எனவே, ஞானசேகரன் கொலை செய்ய கார்த்திக் உடன் சேர்ந்து இருவரும் திட்டம் தீட்டியுள்ளனர்.

நேற்று இரவு ஞானசேகரன் தூங்கியதும் அவரது மூத்த மகள், தனது காதலன் கார்த்திக்கு, ‘தந்தை உறங்கி விட்டார், வீட்டுக்கு வா’ என செல்போனில் மெசேஜ் அனுப்பி உள்ளார். இதையடுத்து, கார்த்திக்கும் ஞானசேகரன் வீட்டுக்கு வந்துள்ளார்.

https://play.google.com/store/apps/details?id=com.tndesigners.nalaiyavaralaru

பின்னர் மூன்று பேரும் சேர்ந்து ஞானசேகரன் மீது மிளகா பொடி தூவி, இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துள்ளனர். அவர் உயிரிழந்தது தெரிந்ததும் உடலை கார்த்திக் தனது காரில் ஏற்றிக்கொண்டு அச்சங்குளம் பகுதியில் போட்டு பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மூன்று பேரிடமும் மணியாச்சி டிஎஸ்பி லோகேஸ்வரன் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஞானசேகரனை, கார்த்திக் கார் ஏற்றிக் கொலை முயற்சி செய்ததும் தெரியவந்துள்ளனர். தொடர்ந்து மூவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp