தொழிலதிபர் அனில் அகர்வால் தலைமையிலான வேதாந்தா குழுமம் உலகம் முழுவதும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளது. துத்தநாகம், ஈயம், வெள்ளி, இரும்புத் தாது, எஃகு, தாமிரம், அலுமினியம், கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு துறை சார்ந்த நிறுவனங்களை உலகம் முழுவதும் நடத்தி வருகிறது.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம் ஒன்றியம் தொகுதி உட்பட்டு ஸ்டெர்லைட் அலை செயல்பட்டு வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு சமுதாய மக்களும் அரசியல் அமைப்புக்கள் போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். அதற்கு பின்னர் அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் உச்சநீதிமன்றம் வரை சென்று தடை செய்தார். வேதாந்தா குழுமத்திற்கு மத்திய பசுமை ஆணையத்தில் அனுமதி வழங்கப்பட்டது.
அதற்கு பின்னர் வைகோ அவர்களின் முயற்சியில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 2018 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற அனைத்து போராட்டம் அமைதியான முறையில் நடந்து.
2018 ஆம் ஆண்டு திடீர் என்று இவ்வளவு பெரிய போராட்டம் வர என் காரணம் என்று இதுவரை தெரியவில்லை.
ஆலையில் என்ன பிரச்சினை 2018 ஆம் ஆண்டு திடீர் என்று இவ்வளவு பெரிய போராட்டம் இன்று வரை கேள்விக்குறி தான். துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பின்னர் ஸ்டெர்லைட் ஆலையும் நடத்த தடை செய்யப்பட்டுள்ளது. இப்போது ஆலை திறக்க பல்வேறு வகையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அப்போதைய மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்து விசாரணை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
அந்த அறிக்கையில் அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் 3 வருவாய்த்துறை அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவர்களின் உறவினர்கள், சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.