கோவை மாவட்டம் பொள்ளாச்சி குமரன் நகர் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புக்களைச் சேர்ந்த நிர்வாகிகளின் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்தும், பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் இந்த வழக்கில் கைதான பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த
மீனாட்சிபுரம் அப்துல் ஜலீல் ( 34 ) மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனுக்கு கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் பத்ரி நாராயணன்
பரிந்துரை செய்திருந்த நிலையில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தர விட்டார் இதனைத் தொடர்ந்து தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அப்துல் ஜலீல்லை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
-நம்ம ஒற்றன்.