விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்தவர் தங்கசாமி (வயது 67). இவரது மனைவி மங்கையர்கரசி (64), பேரன் பிரதுன் (7), உறவினர்கள் பூஜா (20), ரஞ்சனா (20) ஆகிய ஐந்து பேரும் ஒரு காரில் ராஜபாளையத்திலிருந்து திருச்சி மாவட்டம், நவல்பட்டில் உள்ள மகள் வீட்டுக்கு நேற்று மாலை சென்று கொண்டிருந்தனர்.
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மதுரை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மாவட்டம், புழுதிபட்டியை அடுத்த செவந்தம்பட்டி விலக்கு அருகே அவர்களது வாகனம் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலை மையதடுப்பைத் தாண்டி எதிர்சாலைக்கு சென்று எதிரில் வந்த ஒரு காரின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த இரண்டு கார்களும் விபத்துக்குள்ளான நிலையில் அந்த கார் மீது பின்னால் வந்த மற்றொரு காரும் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்து குறித்து தகவலறிந்த துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையின் சிறப்பு நிலை அலுவலர் நாகேந்திரன் தலைமையிலான வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களையும் மீட்டு உடனடியாக மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இதில் சம்பவ இடத்திலேயே மங்கையர்க்கரசி, ரஞ்சனா, பூஜா மற்றும் மற்றொரு காரில் சென்ற பத்மா ஆகிய நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் சிலர் படுகாயம் அடைந்து மணப்பாறை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து துவரங்குறிச்சி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இறந்த நான்கு பேரின் உடல்களை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தக் கோர விபத்து அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.